மூடு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூக நலத் துறையின் செயல்பாடுகள் மற்றும் நோக்கம்

  • சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை குழந்தைகள், பெண்கள், மூன்றாம் பாலினத்துவர் மற்றும் முதியோர் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
  • கருவில் வளரும் பெண் சிசுவினை அழிக்காமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொடங்கி பிறக்கும் பெண் குழந்தைகளின் உயிரைக் காக்கும் தொட்டில் குழந்தை திட்டம், முதலமைச்சரின்  பெண் குழந்தைகள்  பாதுகாப்புத் திட்டம், குழந்தை  திருமண தடுப்புச் சட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்கள், பாதுகாப்பற்ற மற்றும் வறுமையில் வாடும் பெண்களுக்கான சேவை இல்லங்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும பெண்கள் பொருளாதார  மேம்பாடு அடையும்  வகையில் மகளிர் தொழிற்  கூட்டுறவு சங்கங்களின் மூலம் விலையில்லா சீருடை தைத்து வழங்கும் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இது தவிர பெண்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் வரதட்சணை தடுப்புச் சட்டம் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் மற்றும் ஓர் நிறுத்த மையம், இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • மூத்த குடிமக்களை பாதுகாக்கும் விதமாக முதியோருக்கான இல்லங்கள், ஒருங்கிணைப்பு வளாகங்கள், ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டம் மற்றும் மூத்தோர் நலன் காக்கும் சட்டம் ஆகியன சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுமைப் பெண் திட்டம் : New

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் ஆணையின்படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் – புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக உயர்கல்விப்பயிலும் 5389 மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் – புதமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

05.09.2022 காணாலி மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் முன்னிலையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் 5.09.2022 அன்று அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில்; மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

திருமண நிதியுதவி திட்டம்.

1. ஈ.வே. ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம்.

கணவனை இழந்த விதவை பெண்ணின் மகள் திருமணத்திற்கு இந்நிதியுதவி விதவை தாயாருக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்க்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்க்கு முதல் நாள் வரை (இ-சேவை, மக்கள் கணினி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண உதவி விவரம் :

  1. கல்வி தகுதி இல்லை. (ரூபாய் 25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).
  2. பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூபாய் 50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).

சான்றுகள் :

  1. வயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்)
  2. இருப்பிட சான்று
  3. சாதி சான்று
  4. மணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)
  5. திருமணப் பத்திரிகை
  6. குடும்ப அட்டை நகல்
  7. விதவை சான்று (வட்டாச்சியரிடமிருந்து பெற வேண்டும்)
  8. வருமான சான்று தேவையில்லை. (விதவை உதவி தொகை பெறாதவர்கள் மேற்படி வட்டாச்சியரிடமிருந்து விதவை மற்றும் வருமானச் சான்று பெறப்பட வேண்டும்)
  9. ஆதார் கார்டு.

2.அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித் திட்டம்.

தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற மணபெண்ணிற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்க்கு முதல் நாள் வரை (மக்கள் கணினி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண உதவி விவரம்

  1. கல்வி தகுதி இல்லை. (ரூபாய் 25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).
  2. பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூபாய் 50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).

சான்றுகள் :

  1. வயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்)
  2. இருப்பிட சான்று
  3. சாதி சான்று
  4. மணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)
  5. திருமணப் பத்திரிகை
  6. குடும்ப அட்டை நகல்
  7. தாய், தந்தை இறப்பு சான்று (ஆதரவற்றவர் என்ற சான்று)
  8. வருமான சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

3.டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம்.

விதவையின் மறுமணத்திற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற மறுமணம் முடிந்த 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் விதவையின் வயது திருமணத்தின் போது 20 வயது முடிந்திருக்க வேண்டும்.

திருமண உதவி விவரம் :

  1. கல்வி தகுதி இல்லை. (ரூபாய் 25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).
  2. பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூபாய் 50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).

சான்றுகள்

  1. வயது சான்று
  2. முதல் கணவரின் இறப்பு சான்று
  3. முதல் திருமண பத்திரிகை இரண்டாம் திருமண பத்திரிகை
  4. திருமணத்திற்க்கு முதல் நாள் வரை விதவையாக வாழ்ந்தார் என்ற சான்று
  5. விதவை மறுமணம் செய்து கொள்ளும் மணமகனுக்கு இதுதான் முதல் திருமணம் என்பதற்கான சான்று
  6. மணமகனின் வயது சான்று (40-க்குள் இருக்க வேண்டும்)
  7. இருப்பிட சான்று
  8. சாதி சான்று
  9. வருமான சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

4.டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம்.

தம்பதியர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டோர் அதாவது (அருந்ததியர்/பழங்குடியினர்) பிரிவினராகவும், மற்றொருவர் முற்பட்ட வகுப்பு (அ) பிற்பட்ட வகுப்பு (பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) பிரிவினராகவும் இருந்தால் இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணம் செய்த 2 வருடத்திற்க்குள் (இ-சேவை, மக்கள் கணினி மையத்தில்) விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண உதவி விவரம்

  1. கல்வி தகுதி இல்லை. (ரூபாய் 15,000/-க்கான தொகை நுஊளு மூலம் மற்றும் ரூபாய் 10,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு.
  2. பட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி ரூபாய் 50,000/- (ரூபாய் 30,000/-க்கான தொகை நுஊளு மூலம் மற்றும் ரூபாய் 20,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு

சான்றுகள் :

  1. வயது சான்று (மணமகள் மற்றும் மணமகன்)
  2. திருமணப் பதிவு சான்று
  3. வருமானத் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்

01.08.2011 -ஆம் ஆண்டு முதல் கீழ் கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

  1. திட்டம் 1 ஆண் வாரிசு இன்றி ஒரே பெண் குழந்தையுடன் தம்பதியரில் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தையின் பெயரில் ரூ.50,000 அரசால் முதலீடு செய்யப்படும்
  2. திட்டம் 2 ஆண் வாரிசு இன்றி இரு பெண் குழந்தையுடன் தம்பதியரில் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தையின் பெயரில் தலா ரூ.25,000 வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்
  3. திட்டம் 3 ஒரு பெண் குழந்தைக்கு பிறகு இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து கருத்தடை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000 வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்

தேவையான சான்றுகள்

  1. குழந்தைகளின் பிறப்பு சான்றுகள்
  2. வருமானச் சான்று (ரூ.72,000க்குள் இருக்க வேண்டும்)
  3. இருப்பிடச் சான்று
  4. ஜாதிச் சான்று
  5. குடும்ப அறுவை சிகிச்சை சான்று
  6. ஆண் வாரிசு இல்லை என்ற சான்று
  7. குடும்ப அட்டை
  8. ஆதார் கார்டு
  9. குடும்ப போட்டோ

தொட்டில் குழந்தை வரவேற்பு மையம்

தருமபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் 13.04.2002 அன்று தருமபுரி அரசு தலைமை மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொட்டில் குழந்தை மையத்திற்கு முதல் பெண் குழந்தை 13.04.2002 அன்று செல்வி க/பெ சித்தன், எ.ஜெட்டிஅள்ளி, நல்லம்பள்ளி ஒன்றியம், தருமபுரி மாவட்டம் என்ற தம்பதியர்களுக்கு ஐந்தாவது பெண் குழந்தை என்பதால் 13.04.2002 தேதியில் மருத்துவர் முன்னியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை எஸ்.ஆர்.பௌலின் சுவாமிநாதன், சமூக சேவகர், போலிஸ் ஆப்போஸ்டஸ் காண்வேன்ட், சென்னை 600016 என்ற தத்து நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது

இளம் வயது திருமணம் தடுப்புச்சட்டம் – 2006

இளவயது திருமணம் ஒரு சமுதாய பின்னடைவு ஆகும். இளம் வயது திருமணத்தினால் பெண்ணின் உடல்நிலை, இளம் வயதில் கருவுறும் நிலை, அதன் மூலம் எடை குறைவான குழந்தை, குழந்தையின் கற்றல் குறைபாடு ஒட்டுமொத்த வாழ்க்கை சுழற்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 408 இளவயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு ஆலோசனைகள் மூலம் குழந்தையின் கல்வி தொடரப்படுகிறது

குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் 2005

குடும்பங்களில் நடக்கும் பலவிதமான சிரமங்களுக்கு ஆளாகும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். குடும்ப வன்முறை புகாh மனுக்களில் உள்ள காரணங்கள் முறையே பெண்ணின் கணவர் வேறு பெண்ணோடு தகாத தொடர்பு கொண்டு குடித்துவிட்டு வந்து வீட்டை விட்டு விரட்டி சித்ரவதை செய்வதாகவும் , குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல் ஆகியன மனுக்கள் பெறப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேவையின் அடிப்படையில் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பாதுகாப்பு உதவி, இருப்பிட உதவி, பொருளாதார உதவி, பாதுகாவல் உதவி, இழப்பீடு உதவி, குழந்தைகளுக்கு தேவையான ஜீவனாம்ச உதவிகள் நீதிமன்றத்தின்மூலம் பெற்றுத்தரப்படுகிறது

வரதட்சணை தடுப்புச் சட்டம் – 1961

வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றமாகும். இது சமூகத்தில் உள்ள பெண்களின் உரிமைகளையும், சமத்துவத்தையும் மறுக்ககூடிய ஒரு அவலத்தின் அறிகுறி ஆகும். வரதட்சணை பெறாத சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.மனுக்கள் பெறப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் – 2007

இலவச உதவி எண்: 14567

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேவையின் அடிப்படையில் பராமரிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும்.மூத்த குடிமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்குதல் மூத்த குடிமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் ஓர் செயல்பாட்டு முறைக்காக ஓவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லங்களை உருவாக்குவதற்க்கான நெறிமுறைகளை வகுத்தல் இந்தியா முழுவதும் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இச்சட்டமானது பொருந்தும். மூத்த குடிமக்கள் உதவி எண்: 14567

வாரிசுகள் – மகன், மகள், பேரன், பேத்தி (மைனர் குழந்தைகளுக்கு பொருந்தாது)

பராமரிப்பு – உணவு,உடை ,இருப்பிடம், மருத்துவம்

பெற்றோர் – தாய், தந்தை, இரத்த உறவுமுறை, தத்தெடுத்த அல்லது இரண்டாவது தாய் , இரண்டாவது தந்தை, மற்றும் வழக்கில் தொடர்புடைய தாயோ தந்தையோ மூதியோராக இல்லாமலும் இருக்கலாம்

உறவு – வாரிசுகள் இல்லாத முதியோருக்குபின் அவர்களின் சொத்துக்களை சட்டரீதியாக அடைபவர் (மைனராக இல்லாதவர்)

மூத்த குடிமக்கள் – 60 வயதையடைந்த இந்திய குடிமகனாக உள்ளவர்கள் அனைவரும்.

நலம் – மூத்த குடிமக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவம்.