மூடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

தர்மபுரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளி மக்களுக்கு உதவி செய்ய பின்வரும் திட்டங்கள் தமிழ்நாட்டின் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாம் திங்கட்கிழமைகளில்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அன்றே தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை, ஆதார் அட்டை அசல் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவும்.

பராமரிப்பு மானிய பயனாளிகளுக்கான ஆயுள் சான்றிதழ் : பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்

அரசு மற்றும் அரசு  அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  1. 1 முதல் 5 வகுப்பு வரை    ரூ.1000/-
  2. 6 முதல் 8 வகுப்பு வரை    ரூ.3000/-
  3. 9 முதல் 12 வகுப்பு வரை    ரூ.4000/-
  4. இளங்கலை பட்டம்      ரூ.6000/-
  5. முதுகலை பட்டம்      ரூ.7000/-

வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம்

அரசு மற்றும் அரசு  அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும்  பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  1. 9 முதல் 12 வகுப்பு வரை ரூ.3000/
  2. இளங்கலை பட்டம் ரூ.5000/
  3. முதுகலை பட்டம் ரூ.6000/

பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்

  1. 40% மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக  மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
  2. 75% மேல் கை, கால் பாதிக்கப்பட்ட  மாற்றுத்திறனாளி நபர்களுக்கு  பராமரிப்பு உதவித்தொகையாக  மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
  3. 40% மேல் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு  பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
  4. 40% மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு  பராமரிப்பு உதவித்தொகையாக  மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.

சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும்

மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்  பெற்று சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளிக நபர்களுக்கு  வங்கி கடன் மானியமாக ரூ.10,000/- அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை வழங்கும் திட்டடம் (பட்டபடிப்பு படிக்காதவர்களுக்கு

பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

  1. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/ மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
  2. கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில்  உள்ள நபருக்கு ரூ. 25,000/ மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
  3. மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

குறிப்பு :

மேற்காணும் அனைத்து திருமண உதவி திட்டங்களிலும் பட்பயம் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000/ மற்றும் 8 கிராம் தங்ங நாணயம் வழங்கப்படுகிறது.

பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டம்

  1. பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து பயணசலுகைத் திட்டம்
  2. இதர மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கல்வி பயிலுவதற்கு பணிக்கு செல்வதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு 100 KM மிகாமல் பயணம் செய்வதற்கு பேருந்து பயணசலுகைத் திட்டம்
  3. 75% கட்டண சலுகையின் மூலம் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்

  1. மூன்று சக்கரவண்டி
  2. சக்கர நாற்காலி
  3. செயற்கை கால்
  4. ஊன்றுகோல்
  5. செயற்கை கால்
  6. கருப்பு கண்ணாடிமற்றும் மடக்கு ஊன்றுகோல்
  7. காதொலிக்கருவி
  8. சூரிய ஒளியால் சக்திபெறும் பேட்டரி
  9. காதுக்கு பின்னால் பொருத்தும் காதொலி கருவி

நடமாடும் சிகிட்சை பிரிவு வாகனம்

பயிற்சிக்கு வர இயலாத இடங்களில் உள்ள 0 முதல் 6 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு  அவர்கள் வசிக்கும் இடத்திற்கேசென்று நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் மூலம்  பயிற்சி அளித்தல்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

  1. தனிநபர் விபத்து நிவாரணம், அவை இழப்பினை பொருத்து ரூ.1,00,000/- வரை
  2. ஈமச்சடங்கு செலவு ரூ.2,000/-
  3. இயற்கை மரண உதவி ரூ.15,000/-
  4. கல்வி உதவித்தொகை ரூ.1000/- முதல் 4000/- வரை
  5. திருமண உதவித்தொகை ரூ.2000/-
  6. மகப்பேறு உதவி ரூ.6000/-
  7. மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500/-

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் சிறப்புப்பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு இல்லங்கள் :

  1. அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தருமபுரி
  2. அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான ஆரம்ப பள்ளி , தருமபுரி
  3. ரோட்டரி விவேகானந்தா செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப்பள்ளி பிடமனேரி , தருமபுரி
  4. மெர்சி ஹோம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளி சோகத்தூர் கூட்ரோடு , தருமபுரி.
  5. மெர்சி ஹோம் மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி மையம் சோகத்தூர் கூட்ரோடு, தருமபுரி
  6. நியு+லைப் மனநலம் காப்பகம் சோகத்தூர் கூட்ரோடு தருமபுரி
  7. கெர்சீம் மனவளர்ச்சி குன்றியோரக்கான சிறப்பு பள்ளி பெத்தம்பட்டி பென்னாகரம்

மேலும் விபரங்களுக்கு :

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம், தருமபுரி
தொலைப்பேசி எண் : 04342 230050