மூடு

சுகாதாரம்

தேதி : 01/01/2021 - 31/12/2023

1.அம்மா குழந்தைகள் நலபெட்டகம்

  • அனைத்து அரசு மருத்துவனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கும் பிரசவத்திற்கு ரூ.1000 மதிப்பிலான அம்மா நலப் பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது.
  • இப்பெட்டகத்தில் 16 பொருட்கள் அடங்கியுள்ளது.
  • குழந்தைக்கு – ஆடை துண்டு படுக்கை கொசு வலை எண்ணெய் சோப் நகவெட்டி விளையாட்டுப் பொருள் ஷாம்பு, தாய் கை கழுவும் திரவம் சோப் சௌபாக்ய லேகியம் மேற்கூறிய பொருட்கள் பாதுகாப்புடன் கூடிய பெட்டியில் வைத்து பிரசவித்த தாய்மார்களுக்க வழங்கப்படுகிறது

2.தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம்

  • வாரந்திர இரும்புச்சத்து மாத்திரை மற்றும் போலிக் அமிலம் திட்டம் அடிப்படையில் இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை சுகாதாரத்திட்டம் சமுதாயம் சார்ந்த வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள்.
  • சக கல்வியாளர்களை தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள்:ஒவ்வொரு கிராமத்திலும் ஆயிரம் மக்களுக்கு ஒரு சமுதாய நல்வாழ்வு ஊக்குநர் இருப்பார். அவ்ஊக்குநர் மற்றும் பள்ளி ஆசிரியர் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் சக கல்வியாளர்களை தேர்வு செய்யப்படும்.
  • நான்கு சக கல்வியாளர்களில் இரண்டு சக கல்வியாளர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பள்ளிக்கு செல்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களது வயது பதிநான்கு முதல் பத்தொன்பது வரை இருக்க வேண்டும். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  • இரண்டு சக கல்வியாளர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பள்ளிக்கு செல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
  • தகுதிகள்:10 முதல் 19 வயது வரையில் உள்ள குழந்தைகள் அனைவரும் தகுதியானவர்கள்.
  • இச்சேவை சமுதாய நல மையம் மற்றும் வட்டார ஆராம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும். இச்சேவைகள் வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை
  • சத்துணவு, பாலியல் மற்றும் இனப்பெருக்கம்
  • சுகாதாரக்கல்வி
  • தொற்றா நோய்கள்
  • போதைப் பொருள் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
  • பாலியல் சார்ந்த தொந்தரவுகள்
  • வளர் இளம் பருவத்தினர் நல சிகிச்சை பிரிவில் கொடுக்கப்படும்
  • பயனாளி:வளர் இளம் பருவத்தினர்
  • பயன்கள்:இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை

3.வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை

  • வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை 10-19 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு பிரதி வாரம் வியாழக்கிழமை மதிய உணவுக்குப்பின் வழங்கப்படுகிறது.
  • இத்திட்டம் வளர் இளம் பருவத்தினரிடம் காணப்படும் இரத்த சோகையை அகற்ற பெரும் உதவியாக உள்ளது.
  • பள்ளி செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி ஆசிரியரிடம் IFA(100MG) பெற்றுக் கொள்கின்றனர்.
  • பள்ளி செல்லாத வளர் இளம் பெண்கள் அங்கன்வாடி பணியாளரிடம் பெற்றுக் கொள்கின்றனர்.
  • பயனாளி:10-19 வயதான பெண்கள்
  • பயன்கள்:வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை 10-19 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு வழங்குதல்

4.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது.

இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூபாய் 18000 வழங்கப்படுகிறது. மேலும் ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

1.தவணை
தவணை நிபந்தனைகள் தொகை
I தவணை கர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் கிராம நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பிக்மி எண் பெற்றவுடன் Rs.2,000/-
பயன் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் மூன்றாம் மாத நிலையில் Rs.2,000/-
II தவணை நான்காம் மாதம் நிறைவடைவதற்குள் கர்ப்பகால மற்றும் இரத்த பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்திருந்தால். Rs.2,000/-
பயன் இரண்டாம் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் Rs.4,000/-
III தவணை அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தவுடன். Rs.4,000/-
IV தவணைt குழந்தைகளுக்கு 3-ஆம் தவணை OPV/ROTA/PENTA VALENT தடுப்பூசிகள் போட்ட பிறகு. Rs. 2,000/-
V தவணை 2000/-Total குழந்தைகளுக்கு 9 மாதம் (270 நாட்கள் முடிந்து) தடுப்பூசி போட்ட பிறகு Rs.2,000/-
மொத்தம் Rs.18,000/-
2. ரூபாய் 2000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டக பொருட்களில் பட்டியல்
வழங்கப்படும் பொருட்கள் அளவு (ம) எண்ணிக்கை
கர்ப்பிணி தாய்க்கான ஊட்டச்சத்து மாவு 1 கி.கி. 1 kg
இரும்புச்சத்து திரவம் 200 மி.லி. 3 3 Nos
உலர் பேரிச்சம் 1 கி.கி. 1 Kg
புரதசத்து பிஸ்கட் 500 கிராம் 500 gms
ஆவின் நெய் 500 கிராம் 500gms
அல்பெண்டசோல் பூச்சி மாத்திரை 3 Nos
துண்டு 1 Nos

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • கர்ப்பிணித்தாய்மார்கள் 19 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • மேற்கண்ட 5 தவணை உதவித்தொகையினை இரண்டு பிரசவத்திற்கு மட்டுமே பெற முடியும்.
  • உயர் பிறப்பு வரிசை (இரண்டு குழந்தைகளுக்கு மேல்) தாய்மார்கள் முதல் மற்றும் ஜந்தாம் தவணை பெறலாம். (நிபந்தனைக்கு உட்பட்டது.)

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

  • கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் தெரிந்தவுடன் 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற்று இருக்க வேண்டும். அல்லது 12 வாரத்திற்குள் முன் பதிவு செய்திருக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து கிராம நகர சுகாதார செவிலியர்கள்

பயனாளி:

வளர் இளம் பருவத்தினர்,கர்ப்பிணித்தாய்மார்கள்,

பயன்கள்:

,இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை,

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.picme.tn.gov.in/